சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அஞ்சல்துறை கணக்கர் தேர்வை தமிழில் எழுதலாம்: மத்திய அரசு பதில் 

அஞ்சல்துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

News image
Updated On :15 ஜனவரி 2021, 4:27 pm


அஞ்சல்துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

அஞ்சல் துறை தேர்வுகளில் மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்படிருப்பது தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பின் சு.வெங்கடேசனுக்கு மத்திய அரசுக்கு தேர்வை தமிழிலும் நடத்த வலியுறுத்தி தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார். 

அஞ்சல்துறை தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல என  தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில் அஞ்சல்துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் கடிதம் எழுதியுள்ளது.