சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழர் கலாசாரம் மதிக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி

தமிழக கலாசாரம் இந்தியாவிற்கு இன்றியமையாதது என்றும் மிகவும் முக்கியமானது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

Updated On :14 ஜனவரி 2021, 6:55 pm

தமிழக கலாசாரம் இந்தியாவிற்கு இன்றியமையாதது என்றும் மிகவும் முக்கியமானது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல்காந்தி நேரில் பார்வையிட்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

தமிழர்களின் வளர்ச்சியையும், கலாசாரத்தையும் ரசித்து பாராட்டவே இங்கு வந்துள்ளேன். தமிழ் கலாசாரம் இந்தியாவிற்கு இன்றியமையாதது. தமிழக கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.