சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின்சாரம் தாக்கி பலியான பேருந்து பயணிகள் குடும்பத்துக்கு நிவாரண நிதி: தமிழக அரசு அறிவிப்பு

தஞ்சாவூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். 

Updated On :14 ஜனவரி 2021, 9:25 am


சென்னை: தஞ்சாவூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மின் கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். விபத்து குறித்து அறிந்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தேன்.

இந்த விபத்தில் மூன்று போ் காயமடைந்துள்ளனா். விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-மும் , சாதாரண காயமடைந்தோருக்கு ரூ. 25,000-மும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.