சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழர் வீர விளையாட்டைக் காண ராகுல் வருவதில் மகிழ்ச்சி: செல்லூர் ராஜு

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருவதில் மகிழ்ச்சி

News image

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு (கோப்புப்படம்)

Updated On :14 ஜனவரி 2021, 3:21 pm

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருவதில் மகிழ்ச்சி என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 8.10 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழப்பத்தில் இருந்த நேரத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடந்த முதல்வரும், துணை முதல்வரும் அனுமதி கொடுத்தனர். 

தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழரின் பாரம்பரிய விளையாட்டை பார்க்க வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தேசிய தலைவர்கள் யார் வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வந்து செல்ல முடிகிறது.

தேர்தல் நேரத்தில் சிலர் ஏன் விளையாட்டை பார்க்க வருகின்றனர் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல்  உள்நோக்கத்துடன் விளையாட்டை அணுக கூடாது என்று கூறினார்.