சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் நிகழ்ச்சி சங்ககிரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி இவ்விழாவிற்கு தலைமை வகித்து ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து சமத்துவ பொங்கல்வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்பு, சுண்டல் ஆகியவைகளை வழங்கிப் பேசினார்.
சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.வரதராஜன், முன்னாள் பால்வளத்தலைவர் சின்னதம்பி, மாவட்ட இளைரணி அமைப்பாளர் மணிகண்டன், மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், நகர செயலர் சுப்ரமணி, முன்னாள் நகரச் செயலர் முருகன், மகளிரணி நிர்வாகி சந்திராதேவி, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


