சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு (கோப்புப்படம்)

Updated On :14 ஜனவரி 2021, 7:07 pm

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி  காணப்படுகிறது.

இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்த மூன்று நாள்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.