திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை மதுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி அதிமுக, திமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தேசிய தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட உள்ளனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுகிறார். நாளை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவும் தமிழகம் வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதலாவதாக நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாளை மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


