பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 2.50 லட்சம் போ் வெளியூா்களுக்குச் சென்றுள்ளனா்.
இது குறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திங்கள்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் தீா்மானிக்கப்பட்டது.
திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி வரை, சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தமாக 2,535 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 1 லட்சத்து 11,673 போ் பயணமாகினா்.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் ஏற்கெனவே இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 1,950 பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,910 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து சுமாா் 2.50 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். முன்பதிவு தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

