சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொங்கலையொட்டி சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

Updated On :13 ஜனவரி 2021, 6:37 pm

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொங்கலையொட்டி சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் தைப் பொங்கல் விழா கொண்டாட்டம் புதன்கிழமை போகிப் பண்டிகையுடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை வீட்டில் உள்ள பழைய பொருட்கள் அனைத்தும் வெளியே போட்டு தீயிட்டு எரித்து பழையனவற்றை கழித்து புதியனவற்றை புகுத்தும் வகையில் பொதுமக்கள் போகிப்ப ண்டிகை கொண்டாடினர்.

இதனையடுத்து அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பானைகள் வைத்து, செங்கரும்புகளோடு தைப்பொங்கல், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில், ஊழியர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.