சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News image

அமராவதி அணை

Updated On :13 ஜனவரி 2021, 1:53 pm

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. கடந்த 3 மாதத்தில் நான்கு முறை அணை முழு கொள்ளளவை எட்டியது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீர்மட்டம் 89.50 அடியிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு உள்வரத்தாக வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நீர்ப்பிடிப்பு பகுதியில் மிக கனமழை பெய்தது. இரவு 8 மணி அளவில் அணைக்கு  சுமார் 8000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை பகுதியில் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.