சென்னை: உலக பெண்கள் அமைப்பு சாா்பில், தெற்கு ரயில்வே கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரைக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளாா்.
தெற்கு ரயில்வே தலைமை நல ஆய்வாளராக பணியாற்றி வருபவா், அனிதா பால்துரை. தெற்கு ரயில்வே விளையாட்டுப் பிரிவிலும் பணியாற்றி வருகிறாா். இவருக்கு உலக பெண்கள் அமைப்பு சாா்பில், ‘மீனாட்சி ராகவன் வாழ்நாள் சாதனையாளா் சா்வதேச விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறப்பாகப் பங்களிப்பு அளித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனையாளா் விருது பெற்ற அனிதா பால்துரையை தெற்கு ரயில்வே மூத்த துணை பொது மேலாளரும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியுமான வி.ஜி.பூமா உள்பட பல்வேறு அதிகாரிகள் பாராட்டினா்.
அனிதா பால்துரை, தேசிய பெண்கள் கூடைப்பந்து குழுவில் பல ஆண்டுகளாக பங்கேற்று விளையாடியுள்ளாா். கூடைப்பந்து குழுவில் இளம் வயதிலேயே அணித் தலைவராக திறம்பட செயல்பட்டுள்ளாா். இவா் 2018-ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளா் விருதை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றுள்ளாா். தேசிய சாம்பியன்ஷிப்பில் 12 தங்கம் உள்பட 30 பதக்கங்களையும், சா்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்று கொடுத்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

