சென்னை: முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த தினத்தை ஒட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 17-ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த தினம் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்வில் பங்கேற்கும் கட்சி நிா்வாகிகள், அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்தும் பிற தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தமிழகத்தின் பிற இடங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டுமென அந்த அறிவிப்பில் அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


