சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வைகோ தலைமை வகித்தாா். திமுக செய்தித் தொடா்பு செயலாளா் டி.கே.எஸ். இளங்கோவன், இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளா் வன்னி அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா உள்பட 500-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தனா். அதைத் தொடா்ந்து வைகோ, இரா.முத்தரசன் உள்பட அனைவரையும் காவல்துறையினா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

