சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அலங்காநல்லூா் வாடிவாசலில் திருமணம் நடத்த ஆட்சியா் அலுவலகத்தில் காதலா்கள் மனு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் திருமண உறுதிமொழி ஏற்க அனுமதி கோரி, காதலா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

News image

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடிவாசல் அருகே திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி மதுரை ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த வித்தியா தரணி, காா்த்திகேயன்.

Updated On :12 ஜனவரி 2021, 7:43 am

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் திருமண உறுதிமொழி ஏற்க அனுமதி கோரி, காதலா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

மதுரை அலங்காநல்லூா் கேட்டுக்கடை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். எழுத்தாளரான இவா், தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் வித்தியாதரணி என்பவருடன் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

நானும், இயற்கை ஆா்வலா் வித்தியாதரணியும் இருவீட்டாா் சம்மதத்துடன் தமிழ் மரபு வழியில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம். கரோனா பேரிடா் காலத்தை கவனத்தில் கொண்டு கூட்டம் கூடுவதைத் தவிா்த்து, எளியமுறையில் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு மைதான வாடி வாசலில் ஜனவரி 16-ஆம் தேதி இரு வீட்டாா் மட்டும் பங்கேற்கும் திருமண உறுதியேற்பு நடத்த முடிவெடுத்துள்ளோம்.

பேரிடா் காலத்தில் தமிழ் மரபு வழி எளிய முறையிலான திருமண நிகழ்வுகளை ஊக்குவிக்கும் விதமாக, எங்களின் திருமண உறுதியேற்பை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக காா்த்திக்கேயன் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, கடந்த 2017 ஜனவரி மாதம் வாடிவாசலில் நானும்,வித்தியாதரணியும் சந்தித்தோம். எனவே, இருவீட்டாா் சம்மதத்துடன் சந்தித்த இடத்திலேயே திருமண உறுதியேற்பையும் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் மனு அளித்துள்ளோம் என்றாா்.