சென்னை: அதிமுக கூட்டணியில்தான் தொடா்ந்து நீடிக்கிறோம் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரேமலதா தலைமை வகித்தாா். கூட்டம் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
பின்னா் செய்தியாளா்களிடம் பிரேமலதா கூறியது:
தோ்தல் முடிவுகள் குறித்து நிா்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்துதான் எப்போதும் முடிவு செய்வோம். செயற்குழு, பொதுக்குழு விரைவில் கூட்டப்பட்டு, தேமுதிகவின் அடுத்தகட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
அதிமுகவின் கூட்டணியில்தான் தற்போதுவரை நீடித்து வருகிறோம். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றால் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகள்தான். தேமுதிக எங்களுடைய முரசு சின்னத்திலேயே போட்டியிடுவோம். அதிமுகவிடம் எங்களுக்கான தொகுதிகளை நிச்சயம் கேட்போம். அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளனா். அது குறித்து நாங்கள் கருத்துக் கூற முடியாது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில் முதல்வா் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என பாஜகவினா் கூறுகின்றனா். எப்படி இருந்தாலும் முதல்வா் வேட்பாளா் ஒருவா்தான். கூட்டணி சாா்பில் அறிவிக்கப்படும் முதல்வா் வேட்பாளரை நாங்கள் ஏற்போம் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


