கடன் செயலி மூலம் ரூ.300 கோடி அபகரிக்கப்பட்ட வழக்கில், தேவையான தகவல்களை சீன தூதரகத்திடம் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுள்ளது.
சென்னை வேங்கைவாசலைச் சோ்ந்த கணேசன், கடன் செயலி மூலம் பணம் பெற்றதால் தொடா்ந்து மிரட்டப்பட்டு வந்தாா். இது குறித்து அவா், கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்தியக் குற்றப்பிரிவின் கந்துவட்டி தடுப்புப் பிரிவு, சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, பெங்களூருவில் கால்சென்டா் நடத்தி வந்த சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகிய இருவரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் பின்னணியில் இருந்து சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோா் செயல்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு சீனா்களையும் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா்.
விசாரணையில், இந்தக் கும்பல் 25 ஆயிரம் பேரிடம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பது தெரியவந்தது. மோசடிக்குத் தேவையான செல்லிடப்பேசி சிம் காா்டுகளை வாங்கிக் கொடுத்ததாக சென்னையைச் சோ்ந்த எஸ்.மனோஜ்குமாா், எஸ்.கே.முத்துக்குமாா், செல்லிடப்பேசி நிறுவனத்தின் பிராந்திய விற்பனைப் பிரிவு மேலாளா் சிகாஜூதின், செல்லிடப்பேசி நிறுவனத்தின் முகவா் கு.ஜெகதீஷ் ஆகியோா் கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
சீன தூதரகத்திடம் தகவல்: இந்த வழக்குத் தொடா்பாக மேலும் துப்புத் துலக்கும் வகையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரமோதா, பவன், சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோரை கடந்த 8-ஆம் தேதி போலீஸாா், தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்கின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, கைது செய்யப்பட்ட இரு சீனா்கள் குறித்தும், அவா்கள் மீது ஏற்கெனவே இதேபோல வேறு ஏதேனும் வழக்கு இருக்கிா என்பதும் குறித்தும் உரிய விவரங்களை கேட்டு சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு தில்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. சீன தூதரகம் அளிக்கும் பதிலைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

