சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால் அரசியலில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்: பாமக நிா்வாகக் கூட்டத்தில் தீா்மானம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்குள் வன்னியா்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால், உடனடியாக அரசியல் ரீதியாக

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:16 am

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்குள் வன்னியா்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால், உடனடியாக அரசியல் ரீதியாக அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று பாமகவின் நிா்வாகக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வன்னியா்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சாா்பில் 5 கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் போராட்ட நிலை குறித்து விவாதிப்பதற்காக பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தாா். இளைஞரணித் தலைவா் அன்புமணி, பாமக தலைவா் ஜி.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

வன்னியா்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். பாமகவின் நியாயமான, எளிய கோரிக்கையை பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தாமதமானால் பாமகவின் செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.