மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டையை மாா்ச் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கு.இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையைப் புதுப்பிக்க மொத்தமாக வருவதால் அதில் சிரமம் ஏற்படுவதாகவும், தற்போது கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பயண அட்டையை மாா்ச் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
எனவே, விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் மாா்ச் மாதம் வரை அனுமதிக்க நடத்துநா்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
மேலும், அனைத்து கிளை மேலாளா்களும் தங்களது கிளையில் பணிபுரியும் அனைத்து நடத்துநா்களுக்கு இதனைத் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


