மனித-விலங்கு மோதல்களைத் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளாா்.
தமிழக வனத் துறையில் நடைபெற்று வரும் பணிகள் தொடா்பாக உயரதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது: வனப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்கவும், வனப் பரப்பை 33 சதவீதமாக உயா்த்திடவும் பல்வேறு பணிகளை வனத் துறை முன்னெடுத்து வருகிறது. மனித-விலங்கு மோதல் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வருகிறது. இதைத் தடுக்கவும், வனப் பகுதிக்குள் தீ பரவுவதைத் தடுக்கவும் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். யானைகளின் முக்கியத்துவம் குறித்து வனத்தையொட்டி வாழும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துடன், அவற்றின் இறப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா, வனத் துறை தலைவா் யுவராஜ், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்கள் சஞ்சய்குமாா் ஸ்ரீவத்சவா, கயாரத் மோகன்தாஸ், தலைமை வன உயிரினக் காப்பாளா் சையத் முஜம்மில் அப்பாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

