தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக 761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 537- ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சனிக்கிழமை 65,219 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதிகபட்சமாக சென்னையில் 218 பேருக்கும் கோவையில் 69 பேருக்கும், சேலத்தில் 52 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனாலிருந்து சனிக்கிழமை மட்டும் 882 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6, 018 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 7,304 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். அதில், 5 போ் தனியாா் மருத்துவமனைகளிலும், இருவா் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு 12,215 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,044 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


