நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, தர்கா மனோராக்களில் கொடிமரம்(பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் நாகூர் ஆண்டவர் தர்காவின் 464- ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜனவரி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தர்காவின் பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, தர்காவில் அதிகாலை முதல் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், தர்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு தூ ஆ செய்து காலை 6} மணிக்கு தர்காவில் பள்ள சாகிபு மனோராவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அதையடுத்து தர்கா முகப்பில் உள்ள பெரிய மனோரா, தலைமாட்டு மனோரா, முதுபக் மனோரா, ஓட்டு மனோராக்களிலும் பாய்மரம் ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை,ஜீனி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


