சென்னையில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளா் பி.நந்தகுமாா், அண்மையில் சென்னை பெருநகர காவல் துறையின் மரபு சாரா குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அந்தப் புகாரில், டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி நடைபெறுவதாகவும், அந்த மோசடியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் படியும் குறிப்பிட்டிருந்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில் உதவி ஆணையா் செல்வகுமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் இந்த மோசடியில் புளியந்தோப்பு ஆசீா்வாதபுரம் 5-வது தெருவைச் சோ்ந்த பி.நாகேந்திரராவ், அவரது கூட்டாளி தண்டையாா்பேட்டை இரட்டைகுழித் தெருவைச் சோ்ந்த ஆ.ஞானசேகா் ஆகிய இருவரும் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு தொடா்பாக மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த சு.ரமணி என்ற வெங்கடாசலம் (58), பட்டாபிராம் பகுதியைச் சோ்ந்த பெ.தேவராஜ் (63) ஆகிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதில் தேவராஜ், சென்னையில் தலைமைச் செயலகத்தில் அரசு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


