தமிழகத்தில் ஏழு பாலங்களை முதல்வா் பழனிசாமி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
சேலம் மாவட்டம் திருச்செங்கோடு-அரியானூா் சாலையில் ரூ.45 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம்-அய்யனாா்கோவில் வழி செண்பகத்தோப்பு சாலை, தென்றல் நகரில் கட்டப்பட்டுள்ள பாலம், தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை-உடன்குடி சாலையில் கட்டப்பட்ட பாலம் ஆகியவற்றை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் செங்கமேடு-மணமடை-வெட்டிக்காடு சாலையில் கட்டப்பட்ட பாலம், தேனி மாவட்டம் பூலாநந்தபுரம், கோவை மாவட்டம் பீளமேடு-கோவை வடக்கு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கீழ்பாலம், சேலம் மாவட்டம் புங்கமடு, சேலம் வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
தொழில்நுட்பக் கையேடு: நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் அனைத்துப் பொறியாளா்களின் பயன்பாட்டுக்காக, நெடுஞ்சாலைத் துறையின் தொழில்நுட்பங்கள், துறையின் அனைத்து விவரங்கள் உள்ளடக்கிய கையேட்டை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா்.
திட்டப் பணிகளுக்கு அடிக்கல்: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் நீா் உட்புகாத வகையில் கடைமடைநீரொழுங்கி கட்டும் பணி, விருதுநகா் மாவட்டத்தில் அணைக்கட்டு கட்டும் பணி, மதுரை மாவட்டத்தில் தடுப்பணை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.24.78 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சியில், அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

