சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாமக்கல்லில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்

மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை ஆகியவை சார்பில் நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் சனிக்கிழமை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி தொடங்கியது.

News image

நாமக்கல் கண்காட்சியில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள்.

Updated On :9 ஜனவரி 2021, 6:41 pm


நாமக்கல்: மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை ஆகியவை சார்பில் நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் சனிக்கிழமை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தொடங்கி வைத்தார். 

Story image

நாமக்கல் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் 

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டு துறையின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. 

Story image

நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த ஓவியச் சிற்பக்கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

Story image

இக்கண்காட்சியினை கலை பண்பாட்டுத் துறையின் ஆணையர் வ.கலையரசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

Story image

சென்னை,  தஞ்சை கவின் கலைக் கல்லூரிகளின் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Story image
Story image

இதற்கான ஏற்பாடுகளை சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை இயக்குநர் ஹேமநாதன் செய்திருந்தார்.