கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

யானை சவாரி, வாகன சவாரி, வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் அங்குள்ள சுற்றுலா விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை புலிகள் காப்பக நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தியிருந்தது.

கரோனா விதிமுறைக்குட்பட்டு 50% இருக்கைகளுடன் வாகன சவாரி துவக்கப்பட்டது. யானைகள் முகாமும் திறக்கப்பட்டது. அரச அறிவித்துள்ள அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா விடுதிகள் அனைத்தும் 11ம் தேதி முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


