விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட விடத்த குளம், வி.புதூர் ஆகிய கிராமங்களில் அறுவடை நெருங்கியுள்ள இக்காலத்தில் நெற்பயிர்களில் லட்சுமி நோய், குலைநோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட விடத்தகுளம்,வி.புதூர் ஆகிய கிராமங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். இதற்கு உரியப் பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டிருந்த நிலையில், தைத்திருநாளை முன்னிட்டு அறுவடைக்கும் அவர்கள் தயாராகி வந்தனர்.
ஆனால் தற்போது நன்கு விளைந்திருந்த நெற்பயிர்களின் கதிர்கள், லட்சுமி நோய், குலை நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி, மஞ்சள்நிறத்துடன் காய்ந்து, சருகாகிவிட்டதுடன் முற்றிலும் பயனற்றதாகிவிட்டன. இதனால் அறுவடை செய்ய இயலாமல் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே அரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட விவசாய களங்களை நேரில் ஆய்வு செய்து, கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


