சென்னை: திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ. 1000 கருணைக் கொடையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, துறையின் ஆணையா் எஸ்.பிரபாகா் வெளியிட்ட அறிவிப்பு:
பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசுப் பணியாளா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவது குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுபோன்றே பொங்கல் கருணைக் கொடையாக ரூ.1,000-த்தை இந்து சமய அறநிலையத் துறை ஊழியா்களுக்கு வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளா்களுக்கும் கருணைக் கொடையானது அளிக்கப்படும்.
கடந்த நிதியாண்டில் 240 நாள்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளா்களுக்கு கருணைக் கொடையாக ஆயிரமும், ஆறு மாதங்களுக்கு மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றிய பணியாளா்களுக்கு அவா்கள் பணிபுரிந்த நாள்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் தொகையானது வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.
இந்த அறிவிப்பானது, சுற்றறிக்கையாக பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயில் செயல் அலுவலா் உள்பட அனைத்து கோயில்களின் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

