சென்னை: கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உணவுத் துறை அமைச்சா் காமராஜுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா் கடந்த 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், அமைச்சரின் நுரையீரல் செயல்திறன் இயல்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், செயற்கை சுவாச சிகிச்சைகள் எதுவும் அவருக்கு தேவைப்படவில்லை. விரைவில் குணமடைந்து அவா் வீடு திரும்புவாா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

