சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திரையரங்கில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல: நீதிமன்றம்

பள்ளிகள் மூடியிருக்கும்போது திரையரங்குகளில் 100 சதவிகிதம் அனுமதிப்பது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :8 ஜனவரி 2021, 7:48 pm

பள்ளிகள் மூடியிருக்கும்போது திரையரங்குகளில் 100 சதவிகிதம் அனுமதிப்பது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று சூழலில் திரையரங்கில் 100 சதவிகிதம் முழுமையாக ரசிகர்களை அனுமதிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும்,

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி ஜனவரி 11-ஆம் தேதி வரை திரையரங்கில் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையே சேர்த்து விசாரிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.