சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் சங்ககிரி, எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தோருக்கான நேர்முகத் தேர்வுகள் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற வேண்டிய நேர்முகத் தேர்வினை தீநுண்மி தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையடுத்து சேலம், ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி உள்ளிட்ட வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து சங்ககிரி, எடப்பாடி வட்டங்களைச் சேர்ந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் ஆர்.பாலாஜி தலைமையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களை எடப்பாடி அரசு மருத்துவர் பாலாஜி மருத்துவ பரிசோதனைகளை செய்தார். சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.விஜி, சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். நேர்முகத்தேர்வில் 33 பேர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


