சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காஞ்சிபுரத்தில் மகா பெரியவர் ஆராதனை உற்சவம் 

காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27வது வருடாந்திர ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

மகா பெரியவரின் ஆராதனை மஹோத்ஸவத்தை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா பெரியவரின் பிருந்தாவனம்

Updated On :8 ஜனவரி 2021, 11:23 pm

காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27வது வருடாந்திர ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காஞ்சி காமகோடி பீடத்தில் 68வது பீடாதிபதியாக 87 ஆண்டுகள் அருள்பாலித்தவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகா பெரியவர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட இவரது 27வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் தொடங்கியது. 

மஹோத்ஸவத்தை முன்னிட்டு மகா பெரியவரின் திருவுருவ சிலைக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும், வேதபாராயணங்களும் நடைபெற்றது. மகா பெரியவரின் அதிஷ்டானம் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா பெரியவரின் அதிஷ்டானத்துக்குச் சிறப்புத் தீபாராதனைகள் காண்பித்ததுடன் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கினார்.

மாலையில் சங்கரமடத்தில் ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன் குழுவினரின் கர்நாடக இன்னிசை வாய்ப்பாட்டுக் கச்சேரியும் நடைபெற்றது. சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் வி.விஸ்வநாத ஐயர்,மேலாளர் என்.சுந்தரேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை(ஜன 9) சங்கர மடத்தில் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் ஆகியனவும் இரவு மடத்தின் வளாகத்திற்குள்ளாகவே தேரோட்டமும் நடைபெறுகிறது.

நாளை(ஜன.10)ஆம் தேதி மகா பெரியவரின் ஆராதனையை முன்னிட்டு ஸ்ரீருத்ரபாராயணமும், ஹோமங்களும்,விசேஷ பூஜைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அன்றைய தினம் பஞ்சரத்தின கீர்த்தனை கோஷ்டி கானமும் நடைபெறுகிறது.