மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களின் கருத்துகளை கேட்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தை முதல் நாளான பொங்கலன்று 10 லட்சம் உறுப்பினர்களை பாஜகவில் சேர்க்கும் பிரசாரம் செய்ய உள்ளோம்.
தமிழக பேரவைத் தேர்தலுக்கு மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்ய உள்ளோம். அது பாஜகவின் தேர்தல் அறிக்கையாக இருக்கும்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார் அவர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்போம். மத்திய அரசு அஞ்சல் துறை தேர்வில் தமிழை கட்டாயம் சேர்ப்பார்கள்.
கல்பாக்கம் அணுமின் நிலைய அலுவலக பணியாளர்களுக்கான தேர்வு மும்பையில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும். அதிமுகவிடம் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 இடங்கள் கேட்டு எந்த நிர்பந்தமும் நாங்கள் செய்யவில்லை என்று முருகன் கூறினார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


