சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில் பரலோக திறப்பின் வாசல் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி அடுத்த இடையபட்டி கிராமத்தில், பரலோக திறப்பின் வாசல் தேவாலய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று பரவலால் டிசம்பர் மாதம் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் சிலுவை ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டு. இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இடையப்பட்டி மாரிமுத்து கவுண்டர் தோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பரவாத திறப்பின் வாசல் தேவாலய பாதிரியார் எம். குணசேகரன் தலைமை வகித்தார். ஜி அன்பழகன் வரவேற்றார். ஜெயமணி குணசேகரன், நான்சி பிரபு, கலைச்செல்வி, ரம்யா மகேந்திரன் ஆகியோர் விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.
பல்வேறு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதபோதகர்கள் கலந்து கொண்டு, உலக நன்மைக்காகவும், கரோனா பெருந்தொற்று நீங்கவும் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இந்த விழாவில், தொழிலதிபர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, அறிவழகன் நன்றி கூறினார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


