பொதுப் பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் மயிலாடுதுறை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் நீரொழுங்கி, அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று (8.1.2021) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 24 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீரொழுங்கி, அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் தமிழக அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், தென்னாம்பட்டினம் கிராமத்தில், திருவாலி ஏரியின் திருநகரி வாய்க்கால் மற்றும் நாட்டுக்கண்ணி- மண்ணியாறு சங்கமத்தின் கீழே, தென்னாம்பட்டினம் மற்றும் பெருந்தோட்டம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் 9 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீர் உட்புகாவண்ணம் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி; விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி கிராமத்தில், பந்தனேந்தல் கண்மாய்க்கு நீர் வழங்க குண்டாற்றின் குறுக்கே 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 791.97 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் அணைக்கட்டு கட்டும் பணி; மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சாத்தங்குடி கிராமம் அருகே தெற்காற்றின் குறுக்கே, 2 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாத்தங்குடி மற்றும் கண்ணுக்குளம் கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 19 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டி, 293.18 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி; மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திரளி கிராமம் அருகே கவுண்டா நதியின் குறுக்கே, 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திரளி மற்றும் அதனை சுற்றியுள்ள 40 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டி 368.01 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி; என மொத்தம் 24 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


