ஆற்காடு அடுத்த குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த குமரகிரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நீண்டகாலமாக மலைப்பாதை அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், சுமார் 3 கோடி மதிப்பிலான மலைப் பாதை அமைக்க அறநிலைத் துறை சார்பாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


