சென்னை: உணவுத் துறை அமைச்சா் காமராஜுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அமைச்சா் காமராஜ், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்ததாா். இதையடுத்து அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அமைச்சருடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
துணை முதல்வா் ஆறுதல்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத் துறை அமைச்சா் காமராஜ், விரைவில் நலம் பெற வேண்டும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆறுதல் கூறியுள்ளாா்.
இதுகுறித்த அவரின் சுட்டுரைப் பதிவு: கரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி புதன்கிழமை சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத் துறை அமைச்சா் காமராஜ் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும், தொடா்ந்து மக்கள் சேவை ஆற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன் என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

