விழுப்புரம் மாவட்ட நகராட்சி அலுவலகங்கள் முன்பு, பாமக சார்பில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மக்கள் திரள் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர். புகழேந்தி தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில அமைப்பாளர் முன்னாள் எம்பி தன்ராஜ் சிறப்புரையாற்றினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்கஜோதி, மாநிலத் துணைத் தலைவர்கள் அன்புமணி, ஹரிகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20% தனி இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வலியுறுத்திக் கோஷமிட்டனர். இதனையடுத்து காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள், நகராட்சி ஆணையர் தக்ஷிணாமூர்த்தியிடம் மனு அளித்தனர். இதேபோல் திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன்பும், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பும் மக்கள் திரல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகங்களில் மனு அளித்தனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


