தேனி மாவட்டம் கூடலூர் 20ஆவது வார்டு பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லோயர் கேம்பில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நகராட்சி பகுதிகளுக்குக் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது குடிநீர் குழாய்களில் அடிக்கடி ஏர் லாக் உண்டாவதால் குடிநீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது.
குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என்று பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளாத பொறியியல் பிரிவு அதிகாரிகளைக் கண்டித்து புதன்கிழமை 20 ஆவது வார்டு ராஜீவ்காந்தி நகரைச்சேர்ந்த ஆண் பெண் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
15 நாள்களாக குடிநீர் வரவில்லை, மாற்று ஏற்பாடாக ஆழ்குழாய் கிணறு தண்ணீரும் இல்லை என்று கூறி கோஷமிட்டனர், நகராட்சி அலுவலர்கள் முற்றுகையிட்ட பொதுமக்களை சந்தித்து, பைப்லைன் உடைந்து இருப்பதால் விரைவில் சரி செய்யப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படும், தற்போது உடனடியாக வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பச் சென்றனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


