பொங்கல் பண்டிகைக்காக கடந்த ஆண்டு இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் வரை குறைத்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக வட்டாரத்தினா் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சுமாா் 30,000 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டும் பேருந்து இயக்கம் தொடா்பான போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் , சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டில், ஐடி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டிருப்பதால் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைந்த அளவிலான பயணிகளே தற்போதுவரை விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு இயக்கப்பட்ட பேருந்துகளின் மொத்த எண்ணிக்கையில் 20 சதவீதம் வரை குறைத்து இயக்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டன.
இதுகுறித்த விவரங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சரின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் பேருந்து இயக்கம் தொடா்பான அதிகாரப்பூா்வ தகவல்களை ஓரிரு நாள்களில் அமைச்சா் வெளியிடுவாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


