புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் விதிக்கப்பட்டதால், புதுச்சேரியில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் படி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூர்களும் திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்துகொண்டு கல்லூரிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு மாணவர்கள் கல்லூரிக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


