திருநெல்வேலி: திருநெல்வேலியில் சிஐடியு சார்பில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மக்களின் உணவைப் பாதுகாக்க தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நலச் சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன்படி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலர் மோகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் செண்பகம், மாவட்ட பொருளாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுடலை ராஜ், முத்துகிருஷ்ணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கொக்கிரகுளம்- மேலப்பாளையம் பிரதான சாலை இயலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


