சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழகத்தில் சிகிச்சையில் 7,808 போ்

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 7,808- ஆக குறைந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜனவரி 2021, 6:27 am

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 7,808- ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை 1.45 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 820 போ், அதிகபட்சமாக சென்னையில் 235 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்றிலிருந்து இதுவரை 97.5 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துள்ளனா். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை மட்டும் 971 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 2,385-ஆக அதிகரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,177-ஆக அதிகரித்துள்ளது.