சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையின் முக்கிய பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.
இதையும் படிக்கலாமே.. 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
மேலும், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
சென்னையில், கிண்டி, தாம்பரம், பெரம்பூர், வண்டலூர், மாம்பலம், புழல், கோயம்பேடு, ஆவடி, பட்டாபிராம், சைதாப்பேட்டை, அடையாறு, மெரினா, பெசன்ட்நகர், மயிலாலாப்பூர், போரூர், கேளம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அண்ண சாலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


