சென்னை: இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கின் காரணமாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த வாரம்தான் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி மாதம் 15, 26, மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், முறையே திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினங்களை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


