மாதவரம்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மருத்துவ முகாம் மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர் கண்ணதாசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
மாதவரம் மேற்கு பகுதி செயலாளர் வேலாயுதம் வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர் மாதவரம் மேற்கு பகுதி தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாதவரம் பகுதி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண், காது, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


