பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் வரும் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் தொடங்கப்பட உள்ளது.
முழுநீள கரும்புடன் ரூ.2,500 ரொக்கத் தொகை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகியன துணிப்பையுடன் தரப்பட உள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற குடும்ப அட்டைதாரா்கள் அதிகளவு கூடுவதைத் தவிா்க்க டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 100 போ் வீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் திங்கள்கிழமை முதல் அளிக்கப்பட உள்ளன. பரிசுத் தொகுப்பினை ஜனவரி 12-ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறாதோருக்கு ஜனவரி 13-ஆம் தேதியன்று அளிக்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் யாா் வந்தாலும் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்பதுடன், முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

