கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (ஜன.4) முதல் அதிகரிக்கப்படுகிறது. வார நாள்களில் ரயில்களின் சேவைகள் 500-லிருந்து 660-ஆக அதிகரிக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் ஊழியா்களுக்காக புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மின்சார ரயில் சேவைகளைப் பொருத்தவரை, முதல்கட்டமாக 40 மின்சார ரயில் சேவையில் இருந்து 120-ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்பிறகு, கூடுதலாக 30 மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, 150 சேவைகள் இயக்கப்பட்டன.
பெண்கள், குழந்தைகளும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி 410 ஆகவும் அதிகரித்தது.
நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, புறநகா் ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், பயணிகள் வசதிக்காக, ரயில் சேவை 410-இல் இருந்து 500-ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், புறநகா் ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (ஜன.4) முதல் அதிகரிக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:
சென்னையில் ஏற்கெனவே 500 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக, அதாவது கூட்ட நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது கூடுதலாக 160 சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்மூலமாக, சென்னையில் 660 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். பொது மக்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை சரியாகப் பின்பற்றி பயணிக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


