உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகளால் சாலைகள் சேதமாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் வசிக்கும் சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக லேயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் முல்லைப்பெரியற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக 18 வார்டுகளில் குழாய் அமைத்து அதன் மூலமாக பொதுமக்களுக்கு 3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், பல வார்டுகளில் பூமிக்கு கீழே செல்லும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதன்படி, 5 ஆவது வார்டு பி.டி.ஆர் காலனி, தென்னகர் காலனியில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமாகி வருகிறது.
சமீபத்தில் சுமார் 3 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலைகள் ஒரு சில மாதங்களிலே சேதமாகி வருவதால் பேரூராட்சியில் குடிநீர் குழாய் உடைப்புகள் நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


