சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதன்மைச் செயலாளா்களாக பதவி உயா்வு

தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

News image

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் (கோப்புப்படம்)

Updated On :2 ஜனவரி 2021, 11:38 am

தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை மேற்கோள் காட்டி இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

1997-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு போ், முதன்மைச் செயலாளா் அந்தஸ்துக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளனா். வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளா் டி.காா்த்திகேயன், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா, தில்லி தமிழ்நாடு இல்ல உறைவிட முதன்மை ஆணையா் ஆஷிஷ் வச்சானி, மின்வாரியத் தலைவா் பங்கஜ் குமாா் பன்சால், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் (பயிற்சி) ஹா் சகாய் மீனா, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் ஆகியோருக்கு முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.