சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மோரூர் கிழக்கு, சின்னாகவுண்டனூர் ஆகிய இரு ஊராட்சிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு டி.எம்.செல்வகணபதி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட மோரூர்கிழக்கு, சின்னாகவுண்டனூர் ஆகிய இரு ஊராட்சிகளிலிருந்து பல்வேறு மாற்றுக்கட்சிகளிலிருந்தும் மற்றும் மோரூர் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகரிஈஸ்வரன் உள்பட 70 பேர் திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களை அவர் வரவேற்று துண்டுகளை அணிவித்து வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டுமென்றார்.
சங்ககிரி ஒன்றியச் செயலர் பொறுப்பு கே.எம்.ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதராஜன், மாவட்ட துணைச் செயலர் சம்பத்குமார், முன்னாள் ஒன்றிய செயலர் பி.தங்கமுத்து, நகரச்செயலர் சுப்பிரமணி, முன்னாள் நகரச் செயலர் முருகன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கே.ஜீ.ஆர். ராஜவேலு, செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


